Wednesday, July 13, 2022

முதுகலை - சங்க இலக்கியம் - புறம் 2020 - 2021

 

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),

சேலம் - 636 007

எம்.ஏ. தமிழ்பாடத்திட்ட விளக்கம்

எம்.ஏ.. தமிழ் - (2020– 2021 கல்வியாண்டு முதல்)

முதன்மைப்பாடம் : தாள்          4   பருவம்

முதுகலை - சங்க இலக்கியம்  - புறம்

பொது மேம்பாட்டு நோக்கங்கள்: கல்லூரி சூழலுக்கு மாணவரை அறிமுகப்படுத்தப்படுத்தல், 
(பள்ளி கற்பித்தலுக்கும் கல்லூரி விரிவுரைக்கும் இடையேயான வேறுபாடுகள் - கற்பித்தல் முறை). குறிப்புகள் எழுதுதல் மற்றும் குறிப்பு தயாரித்தல் ஆகியவற்றின் வகுப்பு அறை செயல்முறைகளுக்குக் கற்பவரை அறிமுகப்படுத்தல். அவர் உரை மற்றும் குறிப்பு கற்றல் கருத்துக்களுக்கு அறிமுகப்படுத்தல். தேர்வு முறை, மதிப்பீடு, குறித்தல் மற்றும் தர நிர்ணய முறை தொடர்ச்சியான உள் மதிப்பீட்டு முறை மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறை ஆகியவற்றிற்கு அவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். கல்லூரியில்  கிடைக்கும் மாணவர் ஆதரவு சேவைகளுக்கு (என்.எஸ்.எஸ்., என்.சி.சி,, விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படுத்தல்.

 

பாடநெறி தேவைகள்: கற்பவர், அவர் இரண்டாம் நிலை அளவில் கற்றுக்கொண்ட தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணவியல் அடிப்படைக் கருத்துகளைப் பற்றிய புரிதல் வேண்டும். மாணவருக்கு இலக்கியம் அடிப்படை இலக்கணம் பற்றிய எளிய புரிதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

பாடநெறி குறிக்கோள்கள் :   புறத்திணை இலக்கணத்திற்கு இலக்கியமான பாடல்களை அறியச் செய்தல். புறத்திணைகள், புறத்துறைகள் பாடல்களில் அமைந்த பாங்கைத் தருதல். அகம் மற்றும் புறம் என்ற பண்டைத்தழிழரின் பாடு பொருள் தேர்வில் புறத்தில் இடம் பெறும் அடிப்படைக்கூறுகளைக் கற்றல் வாராந்திர திட்டங்களுடன் முன்னேறும்போது, புறம் குறித்த ஒரு அடிப்படை அறிவை அவர் ஒரு முறையாகப் பெறுகிறார், மேலும் அவர் புற இலக்கியம் மற்றும் திணை, துறைகளைப் பற்றிய பொதுவான புரிதலை வளர்த்துக் கொள்கிறார். பறம் காட்டும் தமிழர் பண்பாட்டை உணர்ந்து வாழ்வில் அவற்றை செயல்படுத்தும் செயல்முறைகள் மற்றும் அம்சங்கள் குறித்து சிந்திக்க வைத்தல்.

 பாடநெறி - கற்றல் வெளிப்பாடுகள்:

பொதுவானது: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாழ்வியல், அறம் சார்ந்த இலக்குகள், கொடை சார்ந்த பண்பாடு குறித்து மாணவர், போரின் போதான மக்கள் நிலை , போருக்குப்பின்னுள்ள மக்களின் நிலை, புலவர்களின் அற உணர்வு இலக்கியக்கல்வியின் பல்வேறு கிளைகள் வழி கற்றுக்கொள்ளல். இலக்கிய செயல்முறைகள் குறித்த ஒரு அடிப்படை மற்றும் பொதுவான உண்மையை மாணவர் பெறுதல், இலக்கியங்கள், வாழ்வியலில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் கற்றுக் கொள்ளல்.
 

தகவமைப்பு:  1.புறப்பாடல்களின் தன்மையை அறிகிறான்.    2.புறத்திணைகள்,புறத்துறைகள் பாடல்களில் உள்ள பாங்கை அறிதல்.

பொதுத் திறன் மேம்பாடு : மாணவர்கள்  இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று ஆகியவற்றைப் புறவாழ்வில் பேணுவதற்குக் கற்றுக் கொள்ளல். அறிவு, ஆற்றல், ஈகை, அருள்முதலான பண்புகளைப் பெறுதல்

பாடநெறி ஈடுபாட்டு முறை: வகுப்பு அறை விரிவுரைகள், கரும்பலகை பயன்பாடு மற்றும் பேச்சு, வரைபடங்கள், பல ஊடக வளங்கள், ஊடாடும் அமர்வுகள், நடைமுறை மற்றும் மாணவர் பங்களிப்பு - மாணவர் ஈடுபாட்டு அமர்வுகள்.

சங்க இலக்கியம் புறம்

 

அலகு – 1

அரசப் புலவர்கள் – 8 பாடல்கள்

 புறநானூறு (மொத்தம் 17 பாடல்கள், 13 மன்னர்கள்) –  மன்னனின் பெயர் –  பாடல் எண்

சேர மன்னர்கள்
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ   11 (அரிமயிர்த் திரண்முன்கை)
சேரமான் கணைக்கால் இரும்பொறை  –  74 (குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்)
பாண்டிய  மன்னர்கள்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் –  72
பாண்டியன் அறிவுடை நம்பி –  188

சோழ  மன்னர்கள்          
சோழன் நலங்கிள்ளி –   73

சோழன் கோப்பெருஞ்சோழன் –  214

சோழன் நல்லுருத்திரன் –  190

குறுநில மன்னன்
தொண்டைமான் இளந்திரையன் 185

 

 

அலகு – 2

பெண்பாற் புலவர்கள் -8 பாடல்கள்

.தாயங்கண்ணியார்  250

வெண்ணிக் குயத்தியார் 66

பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் 83

ஔளவையார்  87

பூதப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு 86

பாரி மகளிர் 112

நெட்டிமையார் 9

பொன் முடியார் 299

அலகு – 3

மக்கள் புலவர்கள் -8 பாடல்கள்

 

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 329

உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60

உறையூர் இளம்பொன் வாணிகனார் 264

தொடித்தலை விழுத்தண்டினார் 243

மதுரைக் கணக்காயனார் 330

மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் 59

மதுரை வேளாசான் 305

அடைநெடுங் கல்வியார் 283

அலகு – 4

பதிற்றுப்பத்து பாடிய  புலவர்கள் 8 பாடல்கள்

 

குமட்டூர் கண்ணனார் இரண்டாம் பத்தைப் பாடியவர் பாடல் 1

பாலைக்கௌதமனார்                மூன்றாம் பத்தைப் பாடியவர் பாடல் 1

காப்பியாற்றுக் காப்பியனார்                நான்காம் பத்தைப் பாடியவர் பாடல் 1

பரணர்                ஐந்தாம்  பத்தைப் பாடியவர் பாடல் 1

காக்கைப் பாடினி நச்செள்ளையார்   ஆறாம் பத்தைப் பாடியவர் பாடல் 1

கபிலர் ஏழாம் பத்தைப் பாடியவர் பாடல் 1

அரிசில் கிழார்   எட்டாம் பத்தைப் பாடியவர் பாடல் 1

பெருங்குன்றூர்கிழார்  ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பாடல் 1

அலகு –5

பெரும்பாணாற்றுப்படை முழுவதும்

 

பாடநூல்கள்

1. கு.வெ.பாலசுப்ரமணியன் சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

2.சாமிநாதையா;, உ.வே.,-புறநானூறு மூலமும் உரையும்

தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு தஞ்சாவூர் - 1985.

3.சாமிநாதையர் . உ.வே.,- பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்

சென்னை, ஏழாம் பதிப்பு  1980.

4..சுப்ரமணியன்.ச.வே பதினைன்கீழ்க்கணக்கு நூல்கள்,மணிவாசகர் நூலகம்,சிதம்பரம்

பார்வை நூல்கள்:

1.    சங்க இலக்கியத்தில் பாடாண்திணை, 1975, நா.செயராமன், மீனாட்சி புத்தக நிலையம்,    மதுரை.

2.   கார்த்திகேசு சிவத்தம்பி, திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்"" பண்டைத் தமிழ்ச்சமூகம், வரலாற்றுப் புரிதலை நோக்கி, 2003, மக்கள் வெளியீடு, சென்னை.

3.    தமிழண்ணல்            - பரிசில் வாழ்க்கை,    பாரி நிலையம்,    சென்னை – 1.

4.    சாமி சிதம்பரனார்            - பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும்,    பூம்புகார் பதிப்பகம்,

5.    வீ.சி.சசிவல்லி            - பண்டைத்தமிழர் தொழில்கள்,

    உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,    சென்னை – 113.

6.   கு.சிவபிரகாசம்            - புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள்,

    திருக்குறள் பதிப்பகம்,    சென்னை – 78.

7.    கு.வெ.பாலசுப்பிரமணியம்        - சங்க இலக்கியத்தில் புறப்பொருள்,    மெய்யப்பன் பதிப்பகம்,     சிதம்பரம் - 1.

8.    ஐயனாரிதனார்             புறப்பொருள் வெண்பாமாலை,   பொ.வே.சோமசுந்தரனார்(.)     திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த  நூற்பதிப்புக்கழகம்,லிமிடெட்,    154,டி,டி,கே,சாலை,    சென்னை.

9.சுப்பிரமணியன், . சங்ககால வாழ்வியல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 1986.

10 பாலசுப்பிரமணியன், கு.வெ.(..)சங்க இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். மூ. பதிப்பு-பிப் 2007.

11..பாலசுப்பிரமணியன், கு.வெ. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை. 1995.

 

திட்டக்கட்டுரைகள்:

    1.புறத்திணைகள்    2.புறத்துறைகள்    3.சங்க கால அரசியல் நெறிகள் 4. மன்னர்களுக்கும் புலவர்களுக்கும் இடையிலான உறவு

தனி நபர் செயல்பாடு

    1.பாடப்பகுதியில் உள்ள புறத்துறைகளைத் தொகுத்தல்

    2.பாடப்பகுதியில் உள்ள போர் வகைகளை வகைப்படுத்துதல்

குழுச் செயல்பாடு :

1.ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதை குழுவாகச் சேர்ந்து நடித்துக் காட்டல்.

2.கபிலர் போலவும், பாரியை எதிர்க்கும் பிற மன்னர் போலவும் நடித்துக் காட்டுதல்.

3.ஔவை போலவும், பரணர் போலவும் நடித்து அவர்கள் நிலையிலிருந்து பாடல் கருத்துகளை வெளிப்படுத்தவும்.

4. களவழி நூல் தரும் செய்திகளைக் காட்சிப்படுத்தல்.

 இணைய முகவரிகள்:

https://www.projectmadurai.org/pmworks.html

http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_257.html

http://vaiyan.blogspot.com/2015/04/257.html

http://puram400.blogspot.com/2011/07/257.html

http://www.tamilvu.org/

பாடத்திட்ட செயல்பாட்டுத் திட்டம்

வாரம் -1

மாணவர்க்குக் கல்லூரிச் சூழல் அறிமுகம் -    கல்லூரி சூழலில் மாணவர்க்குக் கிடைக்கும் சலுகைகள் -  பள்ளி கறபித்தல் - கல்லூரி கற்பித்தல் வேறுபாடு -   கல்லூரி பருவத் தேர்வு முறை அறிமுகம் –பாடங்களை குறிப்பெடுத்தல்     - பார்வை நூல்களை படிக்கக் கற்றல் –சுயமாகச் சிந்தித்து எழுதப் பயிற்சி.  

வாரம் -2 திணைக் கோட்பாடு பற்றி கற்பித்தல் –அகம் –புறம் வேறுபாடு – வகைகள் மற்றும் வளர்ச்சி – புறத்திணை மற்றும் துறைகளைப் பற்றி அறிதலின் அவசியம்.

வாரம் -3 தமிழில் உள்ள புற நூல்களை அறிமுகம் செய்தல் புறநானூற்றின் சிறப்பு –தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகம்- புறநானூறு குறிப்பிடும் மன்னர்கள் – பாடிய புலவர்கள்- நூலில் இடம் பெற்றுள்ள செய்திகள் பொது  நிலையில் அறிமுகம்

வாரம் -4 அரசப் புலவர்கள் குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான பிற துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -5 அரசப் புலவர்கள் குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -6 பெண்பாற் புலவர்கள் குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -7 பெண்பாற் புலவர்கள் குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -8 அரசவை புலவர்கள் குறித்தும் தும்பை தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -9 அரசவை புலவர்கள் குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -10 மக்கள் புலவர்கள் குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -11 மக்கள் புலவர்கள் குறித்தும்  தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -12 மக்கள் புலவர்கள்  - தொழில்கள் அவர் பாடிய தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -13 மக்கள் புலவர்கள் தமிழர்களின் அற – மறப் பண்பு – தன்மானம் – போர்க்காட்சிகள்

வாரம் -14 -மன்னர்கள் – புலவர்கள் நிலை – வழிகள் –கிடைக்கும் உணவு –சந்திக்கும் மக்கள்.

அடிப்படைச்சொற்கள் - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சிதும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை  முதலான திணைகள். உண்டாட்டு, தலைத்தோற்றம்,செரு மலைதல், குடிநிலை உரைத்தல்,கொற்ற வள்ளை, துணை வஞ்சி, மகட்பாற்காஞ்சி, வஞ்சினக்காஞ்சி,மகண்மறுத்தல், செருவிடை வீழ்தல், களிற்றுடனிலை, பெரும்பாலை, முதுகாஞ்சி, பழிச்சுதல், குறுங்கலி விறலியாற்றுப்படை, இயன்மொழி,மறக்களவழி, பாண்பாட்டு முதலான துறைகளை அறிவர்.



 

முதுகலை புறம்

1.புறநானூறு பாடல் 11 - சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ

முடிவேந்தர் மூவருள் ஒருவனான இச்சேரமான் நல்லிசைச் செய்யுள் பாடும் சான்றோன் ஆவான்இவன் பாடிய பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்கு உரியனவாகும்நற்றிணைகுறுந்தொகைஅகம் முதலிய தொகை நூல்களில் காணப்படும் பாலைப் பாட்டுக்கள் பல இவனால் பாடப்பட்டவைஇப்பாட்டுக்கள் அனைத்தும் இலக்கிய வளமும்அறவுணர்வும்நல்லிசை மாண்பும் உடையன.

இச்சேரமானைப் பேய்மகள் இளவெயினி என்பவர் பாடியுள்ளார்பேய்மகள் கண்ணுக்குத் தெரியாத வடிவுடையளாதலால்கண்ணுக்குத் தெரியுமாறு பெண்வடிவு கொண்டு இளவெயினி என்ற பெயருடன் இதனைப் பாடினாளென்று கூறப்படுகிறதுபோர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து விரிய இவர் பாடிய சிறப்பால்இளவெயினி என்னும் இயற்பெயருடைய இவருக்கு பேய்மகளென்பது சிறப்புப் பெயராய் அமைந்திருக்க வேண்டும்.

குறமகள் இளவெயினி என்ற ஒருவர் சான்றோர் குழுவில் காணப்படுதலின்அவரிடமிருந்து வேறுபடுத்த இவரை பேய்மகள் என்று சிறப்பித்தனர்குறிஞ்சிநிலத்து நன்மகள் என்று கொள்ளாதுகுறக்குடியில் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டது போல தெரிகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும் 5

விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வயவேந்தன் 10

மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே 15

எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.

பதவுரை:

அரிமயிர்த் திரள் முன் கை – மென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில்

வாலிழை மடமங்கையர் – தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர்

வரி மணல் புனை பாவைக்கு – வண்டலிழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு

குலவுச் சினைப் பூக்கொய்து – வளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து

தண் பொருநைப் புனல் பாயும் – பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும்

விண்பொரு புகழ் விறல்வஞ்சி – வானளாவிய புகழினையும்வெற்றியினையும் உடைய கருவூரில்

பாடல் சான்ற விறல் வேந்தனும்மே – பாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசன்

வெப்புடைய அரண் கடந்து – பகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற்கோட்டையை அழித்து

துப்புறுவர் புறம் பெற்றிசினே – வலிமையோடு எதிர்த்த பகைவரை வென்றுஅவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே

புறம் பெற்ற வயவேந்தன் மறம்பாடிய பாடினியும்மே - திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்

ஏர் உடைய விழுக்கழஞ்சின் – தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கிச் செய்யப்பட்ட

சீருடைய இழை பெற்றிசினே – அருமையான பொன்னரிமாலைமுத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!

இழைபெற்ற பாடினிக்கு - அணிகலன்களைப் பெற்ற பாடினியின்

குரல் புணர் சீர்க் கொளைவல் பாண் மகனும்மே – குரலுக்கு இணக்கமாகவும்சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும்

ஒள்ளழல் புரிந்த தாமரை – பிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட பொற்றாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே ஆங்கு – வெள்ளி நாரினால் தொடுத்த பூக்களை அங்கே பெற்றான்.

பொருளுரை:

மென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில் தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர் (மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்வண்டலில் இழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு வளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும் வானளாவிய புகழினையும்வெற்றியினையும் உடைய கருவூரில் பாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசனே!

பகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற் கோட்டையை அழித்துவலிமையோடு எதிர்த்த பகைவரை வென்றுஅவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே!

திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கி செய்யப்பட்ட அருமையான பொன்னரிமாலைமுத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!

அணிகலன்களைப் பெற்ற பாடினியின் குரலுக்கு இணக்கமாகவும்சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும் பிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட வெள்ளி நாரினால் தொடுத்த பொற்றாமரைப் பூக்களைப் பெற்றான்யான் அது பெற்றிலேன்என்று அரண்மனை வாயிலில் நின்று தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது போல இப்பாடல் அமைந்திருக்கிறது.

அருஞ்சொற்கள்:

மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்

வெப்பு: Severity – கொடுமை

கழஞ்சு - பன்னிரண்டு பணவெடை

கொளை: Melody – இசைபாட்டு, Beating time with hands or cymbals, கைகளால் தாளமிட்டு ஒற்றுக் கை

ஒள் – 1. Bright, பிரகாசமான 2. good, excellent , நல்ல; 3. beautiful, அழகுள்ள; 4.knowing , அறிவுள்ள

அழல் - fire, நெருப்பு; 2. heat, உஷ்ணம்தணல் கொழுந்துசுடர்அனல் பொறிஅடுப்புக் கனல்உலை நெருப்பு

இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை பரிசில்கடாநிலை ஆகும்பரிசில் கடாநிலை என்பது பரிசில் தரும்படி வேண்டிக்கொண்டு வாயிலில் நிற்பதைக் குறிக்கும்புறநானூற்றைத் தொகுத்துத் துறை குறிப்பிட்டவர் 17 பாடல்கள் இத்துறையைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடாநிலை என்பது கடைநிலை என்பதன் திரிபுகடை என்பது அரண்மனை வாயில்கடாவும் = வேண்டும் நிலை அன்றுபரிசில் வேண்டுவோர் வாயிலில் நின்றுகொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறதுபுறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்றும் குறிப்பிடுகிறது.

பாடினி இழைபெற்றாள்பாணன் பூப்பெற்றான்யான் அது பெறுகின்றிலேன் என்பது பரிசில் கடாநிலை ஆயிற்றுஇங்கு நின்னோடு எதிர் வந்து பட்டோரெல்லாம் பரிசில் 

பெற்றார்கள்ஆனால் நான் பேய்மகளானதால் உன் கண் முன் தோன்றிப் பரிசில் பெற்றிலேன் என்பதாலும் பரிசில் கடாநிலை ஆயிற்று.

 

2. புறநானூறு - 74 - (வேந்தனின் உள்ளம்)

பாடியவர்சேரமான் கணைக்கால் இரும்பொறை.
திணைபொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி .
====================================

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'
ஆள் அன்றுஎன்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றிவயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

அருஞ்சொற்பொருள்:-

குழவி = குழந்தை
தடி = தசை
தொடர்ப்பாடு = பற்று
தொடர் = சங்கிலி
ஞமலி = நாய்
இடர்ப்பாடு = இடையூறு
இரீஇய = இருக்க
கேளல் கேளிர் = பகைவர்அயலார்
வேளாண் = கொடை (உபகாரம்)
சிறுபதம் = தண்ணீர் உணவு
மதுகை = வலிமை (மனவலிமை)
அளவை = அளவு
ஈனுதல் = பெறுதல்

இதன் பொருள்:-

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஒரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள்ஆனால்யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டுஎன் பசியைப் போக்குவதற்குஎன்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனேஇப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

பாடலின் பின்னணி:-

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டதுஅப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியதுஇருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர்போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும்வெண்ணிப் பறந்தலை என்று நற்றிணை முன்னுரையும்திருப்போர்ப்புறம் என்று புறநானூற்றுக் குறிப்பும் கூறுவதாக ஒளவை சுதுரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் உரை நூலில் குறிப்பிடுகிறார்3. போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான்ஒரு நாள்சேரமான் பசியின் கொடுமை தாங்காமல்சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டதாகவும்அவர்கள் காலம் தாழ்த்திச் சிற்றுணவை கொண்டு வந்ததாகவும்அதனால் வெட்கமும் வேதனையுமும் அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும்புறநானூற்றில் இப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறதுஆனால்வேறு சிலர்சேரமான் கணைக்கால் இரும்பொறை இப்பாடலை பொய்கையார் என்ற புலவருக்கு அனுப்பியதாகவும்அதைப் பெற்ற பொய்கையார் சோழனிடம் சென்று சேரமானைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்ததாகவும் கருதுகின்றனர்இப்பாடலின் பின்னணியைப் பற்றிய பல செய்திகள் ஆய்வுக்குரியன.

குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும்அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம்குறிப்பாகஅரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில்மானத்தோடு வாழ்வதே ஒருவற்குப் பெருமை தரக் கூடியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறதுதிருவள்ளுவர்மானத்தோடு வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை பல குறட்பாக்களில் கூறுகிறார்மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஒரு அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது.

 

72. இனியோனின் வஞ்சினம்!

பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்1
பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் ஓருவன்நிலந்தரு திருவீர் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கடைச் சங்க காலத்துப் பாண்டிய மன்னர்களுள் முதன்மையானவன்அவனுக்குப் பிறகு முடத்திருமாறன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டதாக வரலாறு கூறுகிறதுபாண்டியன் முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவன் பாண்டியன் பல்யாகசாலை முடுகுடுமிப் பெருவழுதிஇவன் பல யாகங்களைச் செய்ததால் அவ்வாறு அழைக்கப் பட்டான்இவனுக்குப் பிறகு இவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டின் பெரும் பகுதியை மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தான்இவன் வட நாட்டுக்குச் சென்று போரிட்டு அங்குள்ள மன்னர்களை வென்றதால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான்இவன் கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்தான்தன் தவற்றை உணர்ந்த பின், “யானோ அரசன்?, யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது” என்று கூறி உயிர் துறந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறதுநெடுஞ்செழியன் இறந்த பிறகுஅவன் தம்பி வெற்றிவேற் செழியன் என்பவன் பாண்டிய நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்வெற்றிவேற் செழியன் இறந்தவுடன் அவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டுக்கு மன்னனாக சிறுவதிலேயே முடிசூட்டப்பட்டான்இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகுசோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளிசேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறைதிதியன்எழினிஎருமையூரன்இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர்தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்இவனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர்வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் காணப்படுவதாக வரலாறு கூறுகிறதுஇவனைப் புகழ்ந்து பாடியவர்கள் பலர்புறநானூற்றில் 12 பாடல்களில் இவன் புகழ் கூறப்படுகிறதுபத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்ற பாடலுக்கும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை என்ற பாடலுக்கும் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது குறிப்பிடத் தக்கது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒர் சிறந்த அரசன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய இந்தப் பாடல் மூலம் தெரிய வருகிறது.

பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் பகைவர் எழுவரும் ஒன்று கூடிப் போரிட வந்தனர் என்பதை அறிந்த நெடுஞ்செழியன், “ நான் இளையவன் என்று நினைத்து என் வலிமையை அறியாமல் இவர்கள் என்னிடம் போரிட வந்திருக்கிறார்கள்நான் அவர்களைப் போரில் அழிப்பேன்அங்ஙனம் நான் அவர்களை அழிக்காவிட்டால்என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்புலவர்கள் என்னைப் பாடது என் நாட்டைவிட்டு நீங்கட்டும்இரவலர்க்கு ஈயவொண்ணாத கொடிய வறுமையும் என்னை வந்து சேரட்டும்” என்று வஞ்சினம் கூறுகிறான்.


திணைகாஞ்சிதுறைவஞ்சினக் காஞ்சி

நகுதக் கனரேநாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும்தேரும்மாவும்,
படைஅமை மறவரும்உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாதுஉடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கிமுரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்பொருந்திய
10 
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
15 
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

அருஞ்சொற்பொருள்:
1. 
மீக்கூறல் = புகழ்தல். 2. உளைதல் = மிக வருந்துதல். 3. படு = பெரியஇரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்பா = பரவுதல்பணை = பருமை. 6. உறு = மிக்கதுப்பு = வலிமைசெருக்குதல் = அகங்கரித்தல். 7. சமம் = போர். 8. அகப்படுத்தல் = சிக்கிக்கொள்ளுதல்பிடிக்கப்படுதல். 10. செல்நழல் = சென்றடையும் நிழல். 16. வரைதல் = நீக்கல். 17 புன்கண் = துயரம்கூர்தல் = மிகுதல்

உரை: “இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்இவன் இளையவன்” என்று என் மனம் வருந்துமாறு கூறிதங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும்தேர்களும்குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணிஎனது வலிமையைக் கண்டு அஞ்சாதுஎன்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன்நான் அவ்வாறு செய்யேனாயின்என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல், “ எம் வேந்தன் கொடியவன்” என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாகமற்றும்மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குகஎன்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.

சிறப்புக் குறிப்பு: முந்திய பாடலில் பூதப்பாண்டியன் கூறியதைப்போல்இப்பாடலில் பாண்டியன் தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மக்களால் கொடுங்கோலன் என்று கருதப்படுவது ஒரு பெரும்பழி என்று எண்ணுவதைக் காண்கிறோம்மற்றும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவது ஒரு தனிச் சிறப்பு என்பதும் அதை மன்னர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்பதும் இப்பாடலில் காண்கிறோம்தன்னிடம் இரப்பவர்க்கு ஈகை செய்யவியலாத அளவுக்கு வறுமையை அடைவது இறப்பதைவிடக் கொடுமையானது என்ற கருத்தை “ சாதலின் இன்னாதது இல்லைஇனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை” என்ற குறளில் (குறள் - 230) திருவள்ளுவர் கூறுகிறார்இக்குறளுக்கும் இப்பாடலில் இம்மன்னன் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை சிந்திக்கத் தக்கது.

 

188. மக்களை இல்லோர்!

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி(188). இவன் பாண்டிய மன்னர்களுள் ஒருவன்புறநானூற்றில் இவன் இய்றிய பாடல் இது ஒன்றுதான்இவனைப் பிசிராந்தையார் பாடியுள்ளார் (184).
பாடலின் பின்னணி: மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை இப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி சிறப்பித்துப் பாடுகிறான்.
திணை: பொதுவியல்எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. படைப்பு = செல்வம்படைத்தல் = பெற்றிருத்தல். 4. துழத்தல் = கலத்தல் (துழாவல்). 5. அடிசில் = சோறுவிதிர்த்தல் = சிதறல்பயக்குறை = பயக்கு+உறை = பயன் அமைதல்

உரை: பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும்மெள்ள மெள்ளகுறுகிய அடிகளைவைத்து நடந்துதன் சிறிய கையை நீட்டிஅதை உணவில் இட்டுதொட்டுவாயால் கவ்விகையால் துழாவிநெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.

சிறப்புக் குறிப்பு: சிறுகுழந்தை நடக்கும் பொழுதுஅது ஒருஅடி வைப்பதற்கும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் சற்று கால தாமதாவதால், “இடைப்பட” என்று நயம்படக் கூறுகிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (குறள் - 64)

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் - 65)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

PuRanaanuuRu - Poem 73

73. உயிரும் தருகுவன்!


பாடியவர்: சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டுஎனவும் பாடம்சோழன் நலங்கிள்ளிக்கும் அவன் உறவினன் சோழன் நெடுங்கிள்ளிக்குமிடையே பகை இருந்ததுஒரு சமயம் அவர்களுக்கிடையே போர் மூண்டதுபுலவர் கோவூர் கிழார் அவர்களைச் சமாதானப்படுத்திப் போரை நிறுத்தியதைப் புறநானூற்றுப் பாடல் 45-ல் காணலாம்மற்றொரு சமயம் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட பொழுது சோழன் நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான்அவனுக்குப் புலவர் கோவூர் கிழார் அறிவுரை கூறியதாகப் புறனானூற்றுப் பாடல் 44 கூறுகிறதுசோழன் நலங்கிள்ளி படை வலிமையும் சிறந்த ஆட்சித் திறமையும் தமிழ்ப் பலமையும் கொண்டவன்புறநானூற்றில் 15 பாடல்களில் இவன் புகழப்படுகிறான்புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல்கள் இரண்டு (73 மற்றும் 75).

பாடலின் பின்னணி: சோழன் நெடுங்கிள்ளி சோழன் நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிட வருகிறான்நெடுங்கிள்ளி ஏன் போருக்கு வருகிறான்என்னுடைய நாடு வேண்டுமென்று என்னடி பணிந்து என்னைக் கேட்டால் என் நாட்டையும் தருவேன்என் உயிரையும் தருவேன்ஆனால் என்னையும் என் ஆற்றலையும் மதிக்காமல் போரிட நினைத்தால் அவனுக்குப் பெருமளவில் துன்பந்தரும் வகையில் போரிடுவேன் என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி

துறை: வஞ்சினக் காஞ்சி

மெல்ல வந்துஎன் நல்லடி பொருந்தி

ஈயென இரக்குவர் ஆயின்சீருடை

முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;

இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென்இந்நிலத்து

ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்

உள்ளம் எள்ளிய மடவோன்தெள்ளிதின்

துஞ்சு புலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதேமைந்துடைக்

கழைதின் யானைக் கால்அகப் பட்ட

10 வன்றிணி நீண்முளை போலச்சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின்பொருந்திய

தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைகஎன்தாரே!

அருஞ்சொற்பொருள்:

2. சீர் = புகழ்பெருமை. 3 தாயம் = உரிமைச் சொத்துதஞ்சம் = எளிமை. 7. சிதடன் = குருடன். 8. மைந்து = வலிமை. 10. வன்திணி = வலிய திண்ணிய. 13. இரு = கரிய 14. ஒல்லா = பொருந்தாதமுயக்கு = தழுவல்புணர்தல்குழைக = துவள்கவாடுக

உரை: மெல்ல வந்து என் காலில் விழுந்து கொடு என்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிதுஅது மட்டுமல்லாமல்என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன்ஆனால்வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிதுமூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின்தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்.

சிறப்புக் குறிப்பு: விலைமகளிரோடு தொடர்பு கொள்வது நல்லொழுக்கமில்லை என்பதை திருவள்ளுவர்,

அன்பின் விழையார்பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (குறள் - 911)

என்ற குறளில் கூறுவதை இமன்னனின் கூற்றோடு ஒப்பு நோக்குக.

212. யாம் உம் கோமான்?

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர்ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பிஇப்புலவர்சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர்மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ் சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லைசந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “புணர்ச்சிப் பழகுதல் வேண்டாஉணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாக இவர்களுடைய நட்பு இருந்ததுதன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ் சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும்அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும்நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர்இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.

பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்(67, 212, 213, 219, 221, 222, 223). கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறதுகிள்ளி வளவன் கரிகாலனின் பேரன் என்று சிலர் கூறுவர்ஆனால்வேறு சிலர் கிள்ளி வளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பர்கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன்கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பதுபுறநானூற்றில் இவன் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறதுஇவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டதுபகையின் காரணத்தால்தன் மகன்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான்தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
பாடலின் பின்னணி: பாண்டிய நாட்டில் இருந்த பிசிராந்தையார்கோப்பெருஞ் சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார்அந்நட்பின் காரணமாகக் கோபெருஞ்சோழனைத் தன் வேந்தனாகவே கருதினார். “என் வேந்தன் கோப்பெருஞ்சோழன் உழவர்களை விருந்தோம்பல் செய்து ஆதரிப்பவன்அவன் உறையூரில் பொத்தியார் என்னும் பெரும் புலவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண்ஒருவருடைய புகழ்வலிமைகொடைஅருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழிஇயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம்கள்
யாமைப் புழுக்கில் காமம் வீடஆரா
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
வைகுதொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்நாட் டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்;
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10 
வாயார் பெருநகை வைகலும் நக்கே.

அருஞ்சொற்பொருள்:
2. களமர் = உழவர்அரித்த = வடித்தவெம்மை = விருப்பம். 3. புழுக்கு = அவித்ததுஆர்தல் = உண்டல்காமம் = ஆசைவீடல் = விடுதல். 4. ஆரல் = ஒருவகை மீன்சூடு = சுடப்பட்டதுகவுள் = கன்னம். 5. வைகுதல் = இருத்தல்மடிதல் = முயற்சி அற்றுப்போதல். 6. யாணர் = புது வருவாய். 7. பைதல் = துன்பம்வருத்தம். 8. கோழியூர் = உறையூர். 9. பொத்து = குற்றம்குறைகெழீஇ = பொருந்தி. 10. வாயார் = வாய்மை அமைந்தநக்கு = மகிழ்ந்து.

கொண்டு கூட்டு: நும்கோ யார் என வினவின்எம் கோ கோப்பெருஞ்சோழன்அவன் பசிபகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத்திருந்தான் எனக் கூட்டுக.

உரை: “உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின்எம் அரசன் கோப்பெருஞ்சோழன்உழவர்களுக்காக வடிக்கப்பட்டவிரும்பத்தகுந்த கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டுவதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து விழாக்கோலம் கொண்டதுபோல் சுற்றித் திரியும் வளமை மிகுந்தது சோழநாடுஅத்தகைய புதுவருவாய் உடைய வளமான சோழநாட்டில்பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன்அவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் உண்மையான பெருமகிழ்ச்சியோடு உள்ளான்.

190. எலியும் புலியும்

பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் (190). இவன் சங்க காலத்துச் சோழர்களுள் காலத்தாற் பிற்பட்டவன் என்பது இவன் பெயரிலிருந்து தெரிய வருகிறதுபுறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: பிறருடைய முயற்சியால் வாழ்பவர்களின் நட்பைத் தவிர்த்துநல்ல கொள்கை உடையவர்களின் நட்பைக்கொள்ள வேண்டும் என்று இப்பாடலில் சோழன் நல்லுருத்திரன் கூறுகிறான்.

திணை: பொதுவியல்எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

விளைபதச் சீறிடம் நோக்கிவளைகதிர்
வல்சி கொண்டுஅளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகிஉள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகிவழிநாள்
பெருமலை விடரகம் புலம்பவேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
10 
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.

அருஞ்சொற்பொருள்:
1. பதம் = பருவம்சீறிடம் = சிறிய இடம். 2. வல்சி = உணவுஅளை = வளைமல்கல் = நிறைதல். 4. உறுத்தல் = இருத்தல். 5. கேண்மை = நட்பு. 6. கேழல் = பன்றி. 7. அவண் = அவ்விடம்அவ்விதம்வழிநாள் = மறுநாள். 8. விடர் = குகைபுலம்பு = தனிமைவேட்டு = விரும்பி. 9. இரு = பெரியஒருத்தல் =ஆண் விலங்குக்குப் பொதுப்பெயர். 10. மெலிவு = தளர்ச்சி. 11. உரன் = வலிமைஅறிவுஊக்கம். 12. வைகல் = நாள்.

உரை: நெல் விளைந்த சமயத்தில்சிறிய இடத்தில்கதிர்களைக் கொண்டுவந்து உணவுப்பொருட்களை சேகரித்துவைக்கும் எலி போன்ற முயற்சி உடையவராகிநல்ல உள்ளம் இல்லாமல்தம்முடைய செல்வத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்ககொடிய பார்வையையுடைய பன்றிதன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாதுபெரிய குகையில் தனித்திருந்துபின்னர் வேட்டையாட விரும்பிஎழுந்துபெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் தளராத கொள்கையையுடைய வலியவர்களோடு நட்பு கொள்க.

சிறப்புக் குறிப்பு: தன்னால் தாக்கப்பட்ட விலங்கு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்ற கருத்து சங்க காலத்தில் நிலவியது என்பதற்குச் சான்றாக அகநானூற்றிலும் ஒருபாடல் காணப்படுகிறது.

தொடங்குவினை தவிரா அசைவுஇல் நோன்தாள்
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலி…… (அகநானூறு, 29, 1-3)

185. ஆறு இனிது படுமே!

பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன் (185). இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தொண்டைமான் மரபினன்இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவன்இவன் சிறந்த அரசனாகவும்கொடை வள்ளலாகவும் இருந்தது மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கினான்இவன் நற்றிணையிலும் மூன்று பாடல்களை (94, 99, 106) இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்” என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.

திணை: பொதுவியல்எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

அருஞ்சொற்பொருள்:
1. கால் = வண்டிச் சக்கரம்பார் = வண்டியின் அடிமரம் (அச்சு); ஞாலம் = உலகம். 2. சாகாடு = வண்டிஉகைத்தல் = செலுத்துதல்மாண் = மாட்சிமை. 4. உய்த்தல் = செலுத்தல்தேற்றான் = தெளியான்வைகலும் = நாளும். 5. அள்ளல் = சேறுகூழ் அள்ளல் = கலங்கிய சேறு. 6. தலைத்தலை = மேன்மேல்.
உரை: சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம்வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும்அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும்அது போல்மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும்மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால்பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

 

 

அலகு -2  

 புறநானூறு 250

கைம்மை

 

கைம்மை நோன்பு பற்றிக் கூறும் பாடல் இது

அந்த வளங்கெழு திருநகர் அன்று

·         கண்ணீரோடு வந்தவர்கெல்லாம் தாளித்த துவையலோடு உணவு படைத்து அவர்களின் கண்ணீரைத் துடைத்த புரவலன் ஒருவன் இருந்துகொண்டிருந்த பந்தலைக் கொண்டிருந்தது.

அந்தப் புரவலனின் தலைதனித்தலைசிறப்பால் தனிமை பெற்று விளங்கிய தலைஇன்று பெருங்காடு சென்றுவிட்டதுஅதனால்,

அந்த வளங்கெழு திருநகர் இன்று

 

அந்தப் பந்தலில்

·         அவனது புதல்வன்முனித்தலைப் புதல்வன், (தந்தை இல்லாமையால் தந்தை வரவேண்டும் என்றுஅடம் பிடிக்கும் புதல்வன்முனிவு கொண்டிருக்கும் புதல்வன்வான்சோறாகிய தண்ணீரைப் பருகிவிட்டுதாயிடம் தீம்பால் வேண்டுமென்று அழுகிறான்.

·         தாயோ தன் கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் அல்லி இலையில் போட்டு சிறதளவு உணவை உண்டுகொண்டிருக்கிறாள்.

(அந்த முனித்தலைப் புதல்வனுக்குத் தாய்ப்பால் ஊறுமா?)

 

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

 

குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில்புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,

கூந்தல் கொய்துகுறுந் தொடி நீக்கி,

அல்லி உணவின் மனைவியொடுஇனியே      5

புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்!

வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்

முனித்தலைப் புதல்வர் தந்தை

தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே.

 

திணை பொதுவியல்; 

துறை தாபத நிலை.

...................தாயங்கண்ணியார் பாடியது.

2. 66. நின்னினும் நல்லன் அல்லனோ!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில்நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே உள்ள ஓரூர்இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறதுசங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர்அவர்களில் சிறந்தவர்களுக்கு “குயம்” என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும் இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சுதுரைசாமிப் பிள்ளை  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்ஆகவேஇப்புலவர் குயக்குலத்தைச் சார்ந்த பெண் என்பது இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7- இல் காண்க.
பாடலின் பின்னணி: கரிகால் வளவன்வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும்பாண்டிய மன்னன் ஒருவனையும்வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான்அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியதுதன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான்அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார்இப்பாடலில்சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்துகரிகாலனை நோக்கி, “வேந்தேபோரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய்ஆனால்சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல்உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணிஅவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான்ஆகவேஅவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார்.


திணை: வாகைவாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகைஅரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய்நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணிவடக் கிருந்தோனே.

அருஞ்சொற்பொருள்:
1. 
நளி = செறிதல்குளிர்ச்சிஇரு = பெரியமுந்நீர் = கடல்நாவாய் = கப்பல். 2. வளி = காற்றுஉரவோன் = வலியவன்மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்கடந்த = அழித்த. 5. அன்றே = அல்லவா; 6. கலி = தழைத்தல்பறந்தலை = போர்க்களம்.

கொண்டு கூட்டு: உரவோன் மருககரிகால் வளவ,வென்றோய்,வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணிஉலகத்துப் புகழ் மிக எய்தி வடக் கிருந்தோன்நின்னினும் நல்லன் அன்றே எனக் கூட்டுக.

உரை: காற்றின் இயல்பை அறிந்துநீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலேசெருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனேபோருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனேமிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில்முதுகில் புண்பட்டதற்கு நாணிவடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?

சிறப்புக் குறிப்பு: காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.

 

83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப் போல் நக்கண்ணை என்பது பெண்பாற் பெயராகும்கோழி என்பது உறையூருக்கு மற்றொரு பெயர்நாய்கன் என்ற சொல்லுக்கு வணிகன் என்று பொருள்ஆகவேஇப்பாடலை இயற்றிய நக்கண்ணையார் என்பவர் உறையூரைச் சார்ந்த வணிக குலத்தில் இருந்த ஒருவரின் மகள்இவர் புறநானூற்றில் மூன்று பாடல்களையும் (பாடல்கள் 83, 84 மற்றும் 85), அகநானூற்றில் 252-ஆம் பாடலையும் நற்றிணையில் 19, 87 ஆம் பாடல்களையும் இயற்றியவர்.


பாடப்பட்டோன்: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிஇவனைப்பற்றிய செய்திகளை 80 ஆம் பாடலில் காணவும்.



பாடலின் பின்னணி: இப்பாடலின் பின்னனியைப் புரிந்து கொள்வதற்குஇப்பாடலோடு அடுத்து வரும் இரண்டு பாடல்களையும் (பாடல்கள் 84, 85) ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும்சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் ஓரு மல்லனுக்கும் இடையே ஆமூர் என்னும் ஊரில் மற்போர் நடைபெற்றதுநற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன்ஆனால் மல்லனோ ஆமூரைச் சார்ந்தவன்இருவருக்கும் இடையே நிகழ்ந்த மற்போரைப் பார்த்த மக்களில் ஒரு சாரார் நற்கிள்ளிக்கும் மற்றொரு சாரார் மல்லனுக்கும் ஆதரவு அளித்தனர்நற்கிள்ளி மல்லனை எதிர்த்து மற்போர் புரிந்த ஆற்றலையும்அவன் வலிமையும்அழகையும் கண்டு அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார்இப்பாடலில்அவர் தன் காதலை மறைக்கவும் முடியாமல் வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியாமல் கலக்கமுற்று இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார்தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவகையான எண்ணங்களோடு போராடுவதைப் போலவே ஆமுர் மக்களும் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் கலங்கட்டும் என்ற கருத்தை இப்பாடலில் நக்கண்ணையார் கூறுகிறார்.


திணை: கைக்கிளைஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல்தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

அடிபுனை தொடுகழல்மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுகஎன்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

அருஞ்சொற்பொருள்:
1. புனைதல் = அணிதல்தொடுதல் = அணிதல்மை = கருநிறம்அணல் = தாடி. 2. தொடி = கைவளைகழித்தல் = விலக்கல்நேக்கல்யாய் = தாய். 3. அடுதல் = வெல்லுதல்வருத்துதல்போரிடுதல்முயங்கல் = தழுவல். 4. விதுப்பு = நடுக்கம். 6. மையல் = மயக்கம்

கொண்டு கூட்டு: யான் யாய் அஞ்சுவல்அவை நாணுவல்இம்மயையலூர் என்போல் பெருவிதுப் புறுக எனக் கூட்டுக.

உரை: கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றனஆகவேநான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறதுஆனால்அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன்நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்மற்றொரு பக்கம்நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம்அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல்நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

 

புறநானூறு 87, பாடியவர் – ஔவையார்பாடப்பட்டோன் – அதியமான் நெடுமான் அஞ்சிதிணை – தும்பைதுறை – தானை மறம்

பாடல் பின்னணி:  அதியமானின் எதிரிகள் அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர்.  அதை அறிந்த ஔவையார் அவர்களிடம் சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்துபோர் செய்வதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறுவதை நாம் இப்பாடலில் காணலாம்.

களம் புகல் ஓம்புமின் தெவ்விர்போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன்வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.

பொருளுரை:   பகைவர்களே!   போர்க்களத்தில் புகுவதைத் தவிருங்கள் எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கின்றான்.   ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய தச்சன் ஒருவன்ஒரு மாதம் கருத்துடன் உழைத்துச் செய்த தேர்ச்சக்கரம் போன்றவன் அவன்.

சொற்பொருள்:   களம்  போர்க்களம்புகல்  புகுதல்ஓம்புமின்  பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மின்  முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), தெவ்விர்  பகைவர்களே போர்  போர் செய்யஎதிர்ந்து  எதிர்த்துஎம்முளும் –  எங்கள் உள்ளும்உளன்  உள்ளான்ஒரு பொருநன்  ஒரு போர் வீரன்வைகல்  நாள்எண் தேர்  எட்டுத் தேர்கள்செய்யும்  செய்யும் திறன் கொண்டதச்சன்  மர வேலைப்பாடு செய்பவன்திங்கள்  மாதம்வலித்த  கருத்துடன் செய்தகால்   தேர்ச் சக்கரம்அன்னோனே  போன்றவன் (ஏகாரம் அசை நிலை)

 

86. கல்லளை போல வயிறு!

பாடியவர்: காவற் பெண்டு (காதற்பெண்டு எனவும் பாடம்.) காவற் பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்து கொண்ட பெண்பாற் புலவர்புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணி: ஒரு நாள்ஒரு பெண்மணி காவற் பெண்டுவின் இல்லத்திற்கு வந்துஅவர் மகன் எங்கு உளன் என்று கேட்டாள்அதற்குகாவற் பெண்டு தன் வயிற்றைக் காட்டி, “ புலி இருந்து சென்ற குகையைப் போன்றது என் வயிறுஎன் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றதுஎன் மகன் போர்க்களத்தில் இருப்பான்” என்று கூறுகிறார்.

திணை: வாகைவாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரிப்பது வாகை எனப்படும்.
துறை: ஏறாண் முல்லைவீரம் மிகுந்த மறக்குடியை மேல் மேலும் உயர்த்திக் கூறுதல்.

சிற்றில் நற்றூண் பற்றிநின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதிஎன்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோபோர்க்களத் தானே!


அருஞ்சொற்பொருள்:
4. 
கல் = மலைஅளை = குகை . ஓரும் மற்றும் மாதோ என்பவை அசைச் சொற்கள்

உரை: சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்” என்று கேட்கிறாய்என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன்புலி தங்கிச் சென்ற குகையப் போல் அவனைப் பெற்ற வயிறு இதுஅவன் போர்க்களத்தில் தோன்றுவான்அங்கு போய்ப் பார்.

112. உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர்இப்பாடலை இயற்றியவர் வேள் பாரியின் மகளிர் இருவர்சங்க இலக்கியத்தில் அவர்கள் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணி: பாரி இறந்த பின்னர்பாரியின் மகளிரைக் கபிலர் பாதுகாவலான இடத்தில் சேர்த்து அவர்களைக் காப்பாற்றி வந்தார்பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகுஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியதுஅவர்களின் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.

திணை: பொதுவியல்எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலைதலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

அருஞ்சொற்பொருள்:
1.அற்றை = அன்றுதிங்கள் = மாதம். 4. எறிதல் = அடித்தல். 5. இலம் = இல்லாதவர்கள் ஆனோம்.

உரை: ஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்எங்கள் (பறம்புமலையையும் பிறர் கொள்ளவில்லைஅதேபோல்இன்று வெண்நிலவு வீசுகிறதுஆனால்வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.

சிறப்புக் குறிப்பு: மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல முடியவில்லைஆனால்அவர்கள் அவனை சூழ்ச்சியால் வென்றனர். “வென்றெறி முரசின் வேந்தர்” என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.

புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்
துறை :இயன்மொழிகுறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க

ஆவும்ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும்பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும்நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கைமறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோவாழிய குடுமிதங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின்நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!  


பொருளுரை

பசுக்களும்பசுக்களின் இயல்பையுடைய பார்ப்பன இனத்தவர்களும் மகளிரையும்நோய் உடையோரையும் பாதுகாத்து தென் திசையில் வாழும் அவரவர் குடியில் இறந்தோர்க்குச் செய்ய வேண்டிய பிண்டோதகக் (பிண்டம் – சோறுஉதகம் – நீர்கிரியை செய்யும் பொன்போன்ற தங்கமான பிள்ளையைப் பெறாத மணமக்களும் எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்தும் போது நீங்கள் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் தேடிச் செல்லுங்கள் என்று அறநெறியைச் சொல்லும் கொள்கையுடையவன்

அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான உறுதியான குணமும் கொல்லும் தன்மையுள்ள யானை மேலே எடுத்துச் செல்லப்பட்ட வானுயர்ந்த கொடிகள் ஆகாயத்தையே மறைத்து நிழல் தரும்படி ஆட்சி செய்பவனாகிய எங்கள் அரசேகுடுமிநீ வாழ்க

தனது அரசாட்சியின் செம்மையான சிறந்த நேர்மையான ஆட்சியில் செய்த சுத்தத் தங்கத்தை தன் அரசவையில் மகிழச் செய்யும் கூத்து நடிப்போர்க்கும்நடனக் கலைஞர்களுக்கும் வழங்கியவன் உன் முன்னோன் நெடியோன்

நிலத்திற்கும்ஆற்று நீர்ஊற்று நீருக்கும் முன் தோன்றிய கடல் தெய்வத்திற்கு குடுமியின் முன்னோராகிய நெடியோன் விழா நடத்திய நல்ல நீரையுடைய பஃருளி என்னும் ஆற்று மணலினும் பல ஆண்டு காலம் எங்கள் அரசன் குடுமி நீடூழி வாழியவேஎன்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாராட்டிப் பாடியிருக்கிறார்

புறநானூறு 299

குதிரை மறம் பொன்முடியார் பாடியது.

இரண்டு சிற்றூர் மன்னர்களுக்கு இடையே போர்

இருவரும் குதிரைமீது வந்து போரிட்டனர்

 

ஒருவன் பருத்திச்செடி வேலியாக விளங்கும் சீறூர் மன்னன்

அவன் குதிரை உழுந்துச் சக்கையை உண்டு வளர்ந்தது.

 

மற்றொருவன் தண்ணடை (நன்செய்நிலம்அரசன்

இவன் குதிரை நெய் ஊற்றி மிதித்த சோற்றினைத் தின்று வளர்ந்தது

இது பிடரி மயிர் கத்திரிக்கப்பட்டு அழகிய தோற்றம் கொண்டதுமாலையிட்டு அழகு செய்யப்பட்டது.

 

உழுந்து-அதர் தின்ற குதிரை போரிடுவோரை விலக்கிக்கொண்டு பாய்ந்தது

 

நெய்ச்சோறு தின்ற குதிரை அந்தக் குதிரைப் பக்கம் செல்லாமல் ஒதுங்கி நின்றது

 

குதிரைமீது வந்த மன்னர்கள் இவ்வாறு போரிட்டனர்.

குதிரை எப்படி ஒதுங்கி நின்றது?

 

மாதவிடாய்க் காலத்தில் சமையல் செய்யாமல் ஓய்ந்திருக்கும் மகளிர் முருகன் கோயிலுக்குள் நுழையாமல் அதன் வெளிப்புறம் நின்று வழிபடுவது போல நெய்ச்சோறு தின்ற குதிரை ஒதுங்கி நின்றது.

 

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

 

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,

கடல் மண்டு தோணியின்படை முகம் போழ

நெய்மிதி அருந்தியகொய் சுவல் எருத்தின்,

தண்ணடை மன்னர்தாருடைப் புரவி,               5

அணங்குடை முருகன் கோட்டத்துக்

கலம் தொடா மகளிரின்இகந்து நின்றவ்வே.

 

திணை நொச்சி

துறை குதிரை மறம்.

 

காலம் : கி.முஇரண்டாம் நூற்றாண்டு

 

 

 

 

Read more...
Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP